தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது .
வரும் ஏப்ரல் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தேதி முதல் 17,18 மற்றும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஏப்ரல் 21 மிலாது நபியை முன்னிட்டும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் அல்லது டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.