திருச்சி ஜங்ஷன்
வழிவிடு வீர முனீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி ஜங்ஷன் பாரதியார் சாலை ஆர்.சி.பள்ளி எதிரில் உள்ள வழிவிடு வீர முனீஸ்வரர் கோவிலில் 14-ஆம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 5:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7:30 மணிக்கு வீர முனீஸ்வரர் சாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.
9 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி மதியம் வரை நடந்தது. இதையடுத்து பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு மேல் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கி 8:30 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தி, தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.