திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முக்கிய நிர்வாகியும் திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமானின் மகள் ராதா ரஞ்சினி தொண்டைமான் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான இவர் இன்று அண்ணாமலை முன்னிலை பாஜகவில் இணைந்திருப்பது அமமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
அமமுகவை பாஜக கூட்டணிக்கு அழைக்கும் வேலையில் அமமுக பிரமுகர்களின் குடும்பத்தினரை கட்சியில் இணைத்து வருகிறது பாஜக.
சாருபாலா புதுக்கோட்டை சமஸ்தான குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 2001 முதல் 2009 வரை திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தவர். 2009ம் ஆண்டு தேர்தலில் வெறும் 4300 வாக்குகளில் தோல்வியை தழுவியவர்.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு திருச்சி தொகுதியில் 10% வாக்குகள் பெற்றார்.
வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திருச்சி தொகுதியில் அமமுக சாப்பிட்டு போட்டியிட உண்டா உள்ளதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .