திருச்சியில் பத்திரிக்கையாளரை ஒருமையில் பேசி, இதுபோன்ற கேள்வி கேட்டால் கெட்ட வார்த்தையால் தான் பேசுவேன் திருநாவுக்கரசு எம்பி அநாகரிக்க பேட்டி .
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பாஜக அரசை கண்டித்தும் , தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் தலைமை தாங்கி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பேசிய திருநாவுக்கரசர்.. பாஜக அரசு இந்தியாவில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் பொய்யான பிரச்சாரத்தை பாஜக அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் மட்டும் பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வருகின்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசியது..
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டிற்கு எந்த புதிய திட்டத்தையும் அவர் செயல்படுத்தவில்லை. பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேடையில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதியைவிட பாஜக அரசு 3 மடங்கு அதிகமாக நிதி வழங்கி உள்ளதாக கூறுகிறார்கள் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பிரதமர் மோடி மதுரை செல்கிறார் சாமி தரிசனம் செய்யகிறார். ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து கிடைப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நிதிகளை ஒதுக்கி உடனடியாக4000 மருத்துவமனையை அமைத்து திறந்து வைத்திருந்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 4000 கோடி மத்திய அரசிடம் கேட்டு இதுவரை வழங்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். இதற்கு பிரதமர் பதில் சொல்லட்டும் நிதியை ஒதுக்கட்டும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குறிப்பாக தேர்தல் நேரத்தில் சுற்றுப்பயணம் செய்வதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் அவற்றை தடுக்கவில்லை, முதலில் மீனவர்கள் சிறையில் இருக்கக்கூடிய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களின் படகுகளை மீட்டு தர வேண்டும், இதை எதையும் செய்யாத கையாளாகாத அரசாக தான் பாஜக செயல்படுகிறது. இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டகாசத்தை உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக அல்லது மதிமுகவிற்கு அதிகம் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு?? பதில் பதில் அளித்த அவர்.. உங்களுக்கு யார் சொன்னது பொய்யான தகவலை பரப்ப பரப்பாதீர்கள், தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது அனைத்து கட்சிகளும் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளை கேட்டு பெறுவார்கள் அது வழக்கம்தான். தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் எம் பி ஆக நான் உள்ளேன். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன் ஆகவே நான் மீண்டும் திருச்சி தொகுதியை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
திருச்சியில் எங்கள் தொகுதி எம்பி காணவில்லை கண்டால் வர சொல்லவும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு? பதில் அளித்த அவர்..
நிருபர்களிடம் ஆவேசமாக பேசினார், நீ எத்தனை முறை என்னை பார்த்தாய் என்று ஒருமையில் பேசிய அவர், தொடர்ந்து நீ எந்த பத்திரிக்கையை சேர்ந்தவர், பணம் வாங்கிக் கொண்டு கேள்விகளை கேட்கிறாய் என்று ஆக்ரோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சமூக வலைத்தளங்களையும், ஊடங்களையும் இழிவுபடுத்தும் விதமாக தொடர்ந்து பதில் அளித்தார். தொடர்ந்து நிருபர்களை ஒருமையில் ஆவேசமாக பேசினார்.
திருநாவுக்கரசர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளாரா?? என்ற தகவல்கள் பரவி வருவது குறித்த கேள்விக்கு?? பதில் அளித்த அவர், எவனாக இருந்தாலும் செருப்பால அடிப்பேன், இதுபோன்று தகவல்களை பரப்ப அவர்களிடம் சீமானை போன்று கெட்ட வார்த்தையால் தான் பேச வேண்டும், இனி நானும் சீமானை போன்று பேசப் போகிறேன். இந்தக் கேள்வியை சென்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேளுங்கள் என்று ஆவேசமாக பேசி பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டார்.