Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது

0

திருச்சியில் பழவியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது.

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் உமா சங்கர் .
பழவியாபாரி. இவர் திருச்சி புத்தூர் ஹைரோட்டில்
பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்று விட்டார் .
இது குறித்து உமா சங்கர் அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிந்து சரவணன் என்பவரை கைது செய்தார் .
அவரிடம் இருந்து பணம், கத்தி பறிமுதல் .

இதே போல் திருச்சி பாலக்கரை போலீஸ் சரகம் முதலியார் சத்திரத்தில் நடந்து சென்ற முருகானந்தம் என்பவரிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியதாக பாலக்கரையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.