Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் . கருமண்டபம் பகுதி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் பேச்சு.

0

 

திமுக ஆட்சியின் அவலத்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள்

திருச்சி அதிமுக கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் பேச்சு.

திருச்சி மாநகர் மாவட்டம் கருமண்டபம் பகுதி அதிமுக சார்பில் எடமலைப்பட்டி புதூரில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு கருமண்டபம் பகுதி செயலாளர் கலைவாணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கேசி பரமசிவம்,
தொழிற்சங்கம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசும் போது, திமுக ஆட்சி காலத்தில் பொதுமக்கள் எல்லாவித கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாது.வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் சிறப்புரையாற்றி பேசும் பொழுது , இந்தியா துணை கண்டம் முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக
வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. கடந்த 33 மாதகால திமுக ஆட்சியின் அவலத்தால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது. பொதுமக்கள் தி.மு.க.விற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

எடப்பாடியார் நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தார். மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய திட்டங்களை செயல்படுத்தி காட்டினார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதவின் கனவை நிறைவேற்றினார். எப்பொழுது தேர்தல் வரும் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் சிந்தித்து கொண்டு இருக்கின்றனர். காலம் மாறலாம். களம் மாறவில்லை. தடைகளை உடைத்து களம் காணும் வீரராக எடப்பாடியார் இருக்கிறார். எனவே வரும் தாரம் தேர்தலில் அதிமுக மெகா வெற்றி பெறும் மக்கள் திமுகவுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் இலக்கிய அணி பாலாஜி, இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் டிஆர். சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன்,ராஜேந்திரன், ரோஜர், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, மாணவரணி மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன் , வட்டச் செயலாளர் வசந்தம் செல்வமணி, கமலஹாசன், சிங்காரவேலன்,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், என்.பி வெங்கடாசலம்,
பாலு மகேந்திரன்,வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், சரவணன்,ஏழுமலை, தர்கா காஜா, தென்னூர் ஷாஜகான்,ராஜ்மோகன்,அப்பாக்குட்டி.உடையான்பட்டி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.