ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் இல்லாமல் அடித்த போஸ்டரால் திருச்சி அதிமுகவினர் அதிர்ச்சி. நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட செயலாளர் .
வரும் 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர் .
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் முழுவதும் சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்களால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலக்கி எடுத்து வருகின்றனர்.
வெள்ளாவில் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் , மருத்துவ முகாம்கள் போன்ற மக்கள் நல பணிகளில் ஈடுபடுமாறு பொதுச் செயலாளர். அறிவுறுத்தி இருந்தார். இதன் ஓர் பகுதியாக திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக பாலக்கரை பகுதி சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் அடிக்கப்பட்ட போஸ்டரில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாருடைய படமும் இல்லாமல் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த போஸ்டர் அடித்த நபர் ( சமீபத்தில் எஸ் டி பி ஐ கட்சியிலிருந்து அதிமுகவில் இணைந்தவர் என கூறப்படுகிறது) மீது மாநகர மாவட்டச் செயலாளர் .ஜெ. சீனிவாசன் நடவடிக்கை எடுப்பாரா? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா ? என கேள்வி எழுப்புகிறார்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள்