Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே கே நகரில் ஐடி ஊழியரின் வீட்டில் கொள்ளை.

0

 

திருச்சி கே.கே.நகரில்
ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டை உடைத்து கொள்ளை.

திருச்சி கே.கே.நகர் பாரி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தர்மா (வயது 39). இவர் ஐ.டி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்று விட்டார்.

இந்நிலையில் இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த மர்ம கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள், பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வீட்டை பரிசோதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு போன பொருட்களின் மதிப்பு பற்றிய விவரம் உரிமையாளர் வந்த பிறகுதான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.