Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இஸ்லாமியர்களுக்கான தனி அடக்கஸ்தலம் கோரி மமகவினர் அமைச்சர் கேஎன்.நேருவிடம் மனு

0

 

திருச்சி குழுமிக்கரை பகுதியில்
இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேருவிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் குழுமிக்கரை பகுதியில் சிறுபான்மையினர் – அரசாணை (நிலை எண் – 15) 30.01.2024 அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மாவட்ட தலைவர் கவுன்சிலர் அ. பைஸ் அகமது தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கே.என்.நேரு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில்
ம.ம.க மாவட்ட செயலாளர் இப்ராஹிம், த.மு.மு.க மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர் முகமது ரபீக், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், 29 வது வார்டு தலைவர் கபீர், செயலாளர்கள் அப்துல் நாசர், காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் தென்னூர் சதாம், உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.