தான் முதல்வர் தானாக ? என சந்தேகமாக உள்ளார் ஸ்டாலின் . ஜங்ஷன் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் தலைமை கொறடா மனோகரன் பேச்சு.
நான் முதலமைச்சர் தானா ? என சந்தேகமாக இருக்கிறார் ஸ்டாலின் – நேற்று மாலை திருச்சி ஜங்ஷன் பகுதி தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் அரசு கொறடா மனோகரன் பேச்சு.
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், வ.உ.சிதம்பரனாரை கொச்சைப்படுத்தி பேசிய ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்காத, விடியா திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, திருச்சியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில், ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் நாகநாதர் பாண்டி ஏற்பாட்டில், இளங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில்
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்..
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள்,
இத்தகைய பெருமைமிகு எம்ஜிஆர் அவர்களை, திமுக எம்பி ஆண்டிமுத்து ராஜா கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த வார்த்தையை சொல்ல எனது நா கூசுகிறது. அப்படி கொச்சைப்படுத்தி பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரை இன்று முதல் அமைச்சராக இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகமாக இருக்கின்ற, ஸ்டாலின் கூப்பிட்டு கண்டிக்கவில்லை.
செக்கிழுத்த செம்மல், சுதந்திரத்திற்கு போராடிய வ.உ.சிதம்பரனாரையும் வசைப்பாடி, தனது மகனுக்கு வேலை வேண்டும் என்று தந்தை பெரியாரிடம் கடிதம் கொடுத்தார் என, ஏதோ அவர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல பேசும் ஆண்டிமுத்து ராஜாவை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்.. விடியா திமுக தலைமையிலான தமிழக அரசின் கையாலாகாதனத்தால்மக்கள் படும் வேதனைகளை எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் . மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், கவுன்சிலர் அரவிந்தன், மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா, ஓட்டுநர் அணி செயலாளர் ஞானசேகரன் , டிபன் கடை கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.