திருச்சியில் தோழியுடன் 17 வயது சிறுவன் மாயம்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணை அவர் வீட்டுக்கு அழைத்து வந்து தனது தோழி(காதலி) என அறிமுகம் செய்தார் .
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சகிலா பிவி மகனை கண்டித்தார். அதன் பின் சேக் அப்துல்லா அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார். சென்றதுதான் .
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி சகிலா பிவி அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.