பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவுதினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அருகே உள்ள அண்ணாவின் சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி, பகுதி செயலாளர்கள் இளங்கோ, காஜாமலை விஜி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி , மற்றம் மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம் , புஷ்பராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்..