திருச்சி சைபர் கிரைம் பிரிவில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் உரிமையாளர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு.

முதல்வர் குறித்து அவதூறு;
சைபர் கிரைம் .
திருச்சி திருவானைகோவில் பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ்
(வயது 64). இவர் தொமுச மாநில பேரவை செயலாளராக
உள்ளார். இவர் திருச்சி மாநகர் சைபர் க்ரைம் பிரிவில் புகார் மனு ஒன்றை
அளித்துள்ளார். அந்த மனுவில் கோல்டன் பிக்சர்ஸ் யூடியூப் சேனல் என்ற இணைய தளத்தில் இருந்து தனது
செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு செய்தி வந்தது. அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணத்தை அவதூறாக சித்தரித்து தகவல்களை பரப்பியுள்ளார்.
எனவே சம்மந்தபட்ட யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த
சேனலில் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சைபர் க்ரைமில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, முதல்வர் குறித்து
அவதூறு பரப்பிய நபரை தேடி வருகின்றனர்.