Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே கே நகர் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி

0

'- Advertisement -

 

கேகே நகரில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி.

திருச்சி பாரதி நகரை சேர்ந்த முகமது ஆதில் (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் முகமது ஆதில் கே சாத்தனூர் பகுதியில் உள்ள குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்பொழுது முகமது ஆதில் குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடினார். ஆனால் அவர்கள் நண்பர்கள் காப்பாற்ற முயன்று முடியாமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது ஆதில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கேகே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.