Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ்.சி அகர்வால் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் இலவச உடல் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் .

0

திருச்சியில் உடல் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட S .C. அகர்வால் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் உடல் ஊனமுற்றோருக்கு செயற்கைகால் ,காலிபர்,வீல் சேர் உள்ளிட்டவை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது .

சேர்மன் அகர்வால் தலைமையில் நடைபெற்ற இம் முகாமில் கடந்த முகாமின் போது மனுக்கள் பெறப்பட்டு அளவீடு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (ஜனவரி 28ஆம் தேதி ஞாயிறு) செயற்கை கை ,செயற்கை கால், வாக்கர்ஸ், வீல் சேர், ஊன்றுகோல் ,
மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இம்முகாம் குறித்து எஸ் சி அகர்வால் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர் அகர்வால் கூறும் பொழுது கடந்த 35 ஆண்டு காலமாக இந்த சேவையை செய்து வருகிறோம். இதுவரை 6,800 செயற்கை கை, கால்கள், 9500 பேருக்கு காலிபர் மற்றும் வீல் சேர்கள் வழங்கி உள்ளோம் .
சென்னை மதுராந்தகம் பகுதியில் 2 பள்ளிகளை இலவசமாக நடத்துகிறோம். மேலும் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை 1000 பேருக்கு ,
திருமண உதவித்தொகை மற்றும் கண் பார்வையற்றவர்களுக்கும் தொழு நோயாளிகளுக்கும் என அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்துகிறோம்.

 

திருச்சியில் இது இரண்டாவது முகாம் இதுவரை சுமார் 1000 முகாம்கள் வரை நடத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் நடைபெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.