திருச்சி புத்தூர் நால்ரோடு டாஸ்மாக் அருகாமையில் பிணமாக கிடந்த முதியவர்.
திருச்சி புத்தூர் நான்கு ரோடு டாஸ்மாக் அருகாமையில் சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என உடனடியாக தெரியவில்லை .இது பற்றி தகவல் அறிந்த புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் உறையூர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.