மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வருடா வருடம் ஜெயின் சமூகத்தினர் பசுமடத்தில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை
காஜாபேட்டையில் அமைந்துள்ள கோ பரிபால ஆச்சிரமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சார்பில் நிர்வாகிகள் முகேஷ் குமார், நரேசன் , சசிகுமார் ஆகியோர் தலைமையில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றது.
பொங்கல் வைத்து பசுமடத்தில் உள்ள அனைத்து பசுக்களுக்கும் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கலும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் ஜெயின் சமூகத்தினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .