எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்.

அஇஅதிமுக நிறுவனத்தலைவர், எம்ஜிஆரின் 107-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : –
வருகின்ற 17.01.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பெல் வளாகத்தின் வாயிலில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வட்ட, எம்ஜிஆர மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் अली, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி, கலைப்பிரிவு நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கணைகள் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளித்து கொண்டாடிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட செயலாளர் குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

