Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதித்த வாலிபர் சாவு .

0

'- Advertisement -

 

திருச்சியில் டெங்கு பாதித்த இலங்கை
இசை பள்ளி மாணவர் பலி.

இலங்கை ஸ்ரீ கராஜா பசாரா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நிரோஷன் ( வயது 20)
இவர் ஸ்ரீரங்கம் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் பயின்று வந்தார்.

Suresh

திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவில் உள்ள ஆசை மேன்சனில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வந்தார்.

இரு தினங்களுக்கு முன்பு அவரை டெங்கு காய்ச்சல் பாதித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் நிரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் நேருவிடம் கேட்டபோது,
இறந்த மாணவர் நிரோசனுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. டெங்கு உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.