Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது

0

 

திருச்சி தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு.

4 வாலிபர்கள் கைது.

திருச்சி காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிவக்குமார் என்கிற மூக்கன் ( வயது 29 ).இவர் காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் சங்கிலியாண்டபுரம் மணல் வாரித்துறை ரோடு பொதுக்கழிப்பிடம் அருகில் சென்று கொண்டிருந்தபோது இவரை கத்தி முனையில் நான்கு பேர் வழிமறித்து பணத்தை பறித்து சென்று விட்டனர்.இது குறித்து சிவகுமார் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு கிஷோர் கண்ணன் ,
அறிவழகன், ஹரிகரன், நவாஸ் ஆகிய நான்கு வாலிபர்களை கைது செய்து. அவர்களிடமிருந்து பணம் ,கத்தி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.