திருச்சியில் நாளை நடக்கிறது:

ஜோசப் லூயிஸ் பிறந்தநாள் விழா
முன்னாள் எம்.பி.அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்.அடைக்கலராஜ் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப்லூயிஸ் அடைக்கலராஜ் பிறந்தநாள் விழா நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ஜென்னி பிளாசாவில் நடைபெறுகிறது. அங்கு முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் சிலைக்கு ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள்,பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அடைக்கலராஜ் பேரவை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.