திருச்சி மாவட்ட மகளிர் அணி சார்பில் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சிந்துஜா ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும்
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன் மாநகர துணை செயலாளர் சந்திரமோகன், சரோஜினி. செல்லையா சவுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி கழக நிர்வாகிகள்,
அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஏரளாமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.