திருச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற எலெக்ட்ரிசியன் மீது அரசு பஸ் மோதி பரிதாப பலி .
திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ஒரு துக்க காரியத்துக்கு செல்வதற்காக மாலை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது நண்பனை அழைக்க சென்று கொண்டு இருந்தார் .
அப்போது குடமுருட்டி சோதனை சாவடி அருகில் குடமுருட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதி மண்டை உடைந்து படுகாயமடைந்த ராமுவை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.