Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: டூவீலரில் சென்ற பெண் வங்கி ஊழியரிடம் தாலியை பறித்த 2 வாலிபர்களுக்கு வலை .

0

 

இருசக்கர வாகனத்தில் சென்ற
வங்கிப் பெண் ஊழியரை தாக்கி 2 1/2 பவுன் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி ஐய்யப்பன் நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி புஷ்பலதா (வயது 44). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.

இவர் இரவு 8 மணி அளவில் தனது மொபட்டில் சாத்தனூர் சாலை பகுதியில் சென்றார் .அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் அவரது தலையில் ஓங்கி தட்டினர்.
அதிர்ச்சி அடைந்த அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்த தருணத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி செயினை பறித்தனர் .

அப்போது புஷ்பலதா அந்த செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இதனால் தாலி செயின் பாதியாக அறுந்தது.
அதில் ஒரு பகுதியை கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இரண்டரை பவுன் எடை கொண்ட செயினின் ஒரு பகுதி புஷ்பலதா போராடியதால் மீதி நகை தப்பியது.

இந்த சம்பவம் குறித்து புஷ்பலதா கே.கே.நகர் குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.