Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கடத்திய 2வது மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு.

0

 

திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் சாந்தனு முகமது காரில் கடத்தி சென்று அவரை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சந்து முகமது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சந்து முகமது தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் புகாரில் தன்னுடைய இரண்டாவது மனைவி பல்கீஸ் பானு மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஷாஜகான், அறிவழகன், புனிதன் நான்கு பேர்தான் தன்னை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.