எம்ஜிஆரின் 36 வது நினைவு நாள் : திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட சார்பில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
எம்ஜிஆரின் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி. ரத்னவேல் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன் , எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், பகுதி செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா , கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ, வணக்கம் சோமு மற்றும் அணி நிர்வாகிகள்,
வட்ட வட்ட செயலாளர், தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.