திருச்சி உறையூரில் நண்பன் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை.
திருச்சி உறையூர் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் கோகுல் (வயது 21 ).சமீபத்தில் இவரது நண்பன் இறந்துவிட்டார். இதனால் சோகம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை திருச்சி உறையூர் சோழராஜபுரத்தில் ரேஷன் கடையில் உள்ள மண்ணெண்ணெய் ஷெட்டில் கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாய் ரேவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து இந்தசம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.