எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி 44 வட்டச் செயலாளர் ஒத்தக்கடை மகேந்திரன் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்.
இன்று அஇஅதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 36 வது. நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் 44 வது வட்ட செயலாளர் ஒத்தக்கடை மகேந்திரன் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இதில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் நிர்வாகிகள் எஸ் எம் டி மணிகண்டன், இபி மோகன் , கல்யாணசுந்தரம், லட்சுமணன். நாகலட்சுமி , அல்லி ராஜேந்திரன் மற்றும் துரை ஆகியோர் இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.