எம்ஜிஆரின் நினைவு நாளில் ஏழைகளுக்கு உதவிகள் அளித்திட வேண்டும் . அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.
திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : –
அஇஅதிமுக நிறுவனத்தலைவர், எம்ஜிஆரின் 36-ழ் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 24. 12.2023 அன்று காலை 8.30 மணியளவில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக. திருச்சி திருவெறும்பூர்
பெல் நுழைவு வாயிலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு, வட்ட கழக, எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி. அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி. அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு. வர்த்தக அணி, கலைப்பிரிவு, மற்றும் செயல்வீரர்கள் வீராங்கணைகள் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நமது கழகத்தினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் அளித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .