Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.

0

 

திருச்சி நீதிமன்றத்தில்
குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில்
இலவச மருத்துவ முகாம்..

திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது.
குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமை மாவட்ட நீதிபதி கே.பாபு, தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா மற்றும் நீதிபதிகள் சிவகுமார், பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இம்முகாம் காலை 10 மணி முதல் .மாலை 4 மணி வரை இந்த முகாம் தொடர்ந்து நடைபெற்றது.

.குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்நடந்தஇம்முகாமில்
இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை,
கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை,
பல் மருத்துவம்,
மேலும் துரையீரல் பரிசோதனை,
செவித்திறன் பரிசோதனை. இ.சி. ஜி.பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டது.

.இந்த இலவச மருத்துவ முகாமில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின்
துணை தலைவர் பிரபு, பொருளாளர் கிஷோர் குமார், மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்லாஸ் மற்றும்
இந்த முகாமிற்கான அணைத்து ஏற்படுகளையும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் செய்திருந்தார்.

இம்முகாமில் குற்றவியல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.