திருச்சி: அரசு மருத்துவமனையில் இறந்த அடையாளம் தெரியாத நபர். இவரைப் பற்றி தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …
திருச்சி பொன்மலை ரயில் நிலையம் இடையே முத்துமணி டவுன் என்ற இடத்தில் கடந்த டிச.9 தேதி ரயில் தண்டவாளம் அருகே 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கி விழுந்துள்ளார்.
உடன உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ரயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால் இருப்புப்பாதை காவல் நிலைய எண்ணிற்கு 9498101978 தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.