பொன்மலையில்
எலக்ட்ரீசியன் குடிபோதையில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு.
திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45 )இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
சம்பவத்தன்று வீட்டில் இரண்டாவது மாடிக்கு மது குடிக்க செல்வகுமார் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த செல்வகுமாரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் செல்வகுமார் இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.