ஸ்ரீரங்கத்தில் ரூ.11.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி கல்வெட்டுத் திறந்தார் அமைச்சர் கே.என்.நேரு .
ஸ்ரீரங்கத்தில் ரூ.11.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டி கல்வெட்டை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
தமிழக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை சார்பில் தமிழக அரசு மூலதன மானிய நிதி 2023 2024 ஆண்டு கேப்பிட்டல் கிரவுண்ட் பண்ட் திட்டத்தின் கீழ் ரூபாய் 11 கோடி 10 லட்சம் மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டு விழா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்
கே. என். நேரு ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தார்.
ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியாக தரைதளத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தவும், 22 கடைகள் மற்றும் பயணிகள் காத்திருப்பு இருக்க 108 எண்ணிக்கை அமைய உள்ளது. அதேபோல் முதல் தளத்தில் 260 நபர்கள் அமரும் வகையில் சிறிய திருமண மண்டபமும் கட்டப்பட உள்ளது.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன், மாநகராட்சி மண்டலத்தலைவர் ஆண்டாள் ராம்குமார் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,
ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், பகுதி செயலாளர்கள் ராம்குமார்,நாகராஜன், காஜாமலை விஜி மோகன் தாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, கவுன்சிலர்கள் செல்வி மணி,ராதா, அப்பீஸ் முத்துக்குமார்,ஜவகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.