Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்ஐடியில் சூரிய மின் ஆற்றல் செயல்பாடுகள் குறித்த தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி பட்டறை .

0

'- Advertisement -

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் (என்ஐடி) சூரிய மின் ஆற்றல் செயல்பாடுகள் குறித்து அகில இந்திய அளவிலான 5 நாள் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
பெல் ஆலை வளாகத்தில் உள்ள இந்தியப் பொறியாளா் கழகத்தின் திருச்சி கிளை, தேசிய தொழில்நுட்பக் கழகம் இணைந்து டிச.18 முதல் 22 வரை பயிலரங்கை நடத்தவுள்ளன. சூரிய ஆற்றல் மின்சாரத்தின் செயல்பாடுகள், மாற்று அமைப்புகள், நவீன தொழில்நுட்ப யுத்திகள் குறித்து இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது. இதன்மூலம், சோலாா் பிவி எலக்ட்ரிக் கன்வொஷன் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Suresh

இப்பயிலரங்கு 30 முதல் 40 சவீதம் செயற்முறை பயிற்சியாகவும், நடைமுறை அமா்வுகளையும் கொண்டதாக அமையும். மேலும், சூரிய ஆற்றல் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களுக்கு நேரில் சென்றும் மின் உற்பத்தி தொடா்பான தொழில்நுட்பங்களைக் கண்டறியும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்தப் பயிலரங்கில், தொழில் வல்லுநா்கள், கல்வியாளா்கள், பயிற்சி பொறியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் ஆலோசகா்கள் என 60-க்கும் மேற்பட்ட நிபுணா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இணையதளத்திலும், 99163-26446, 94892-02825 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என பயிலரங்க ஒருங்கிணைப்பாளா்கள் என். குமரேசன், எஸ். தா்மலிங்கம் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.