திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலேயே சுருண்டு வீழ்ந்து பயணி பரிதாப பலி.
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வடக்கம்மம்பட்டி பாதக்கார தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. (வயது 50). இவர் மணல்மேல்குடி பகுதியிலிருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்ஸில் வந்தார். பின் விழுப்புரம் செல்லும் பஸ்ஸில் ஏறினார். அப்போது பஸ்ஸிலேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிதாபமாக இறந்து விட்டார் .உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.