திருச்சி திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு சொந்த பால்பண்ணையில் தயாரித்த இனிப்புகள் விற்பனை என திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கிளைகள் தொடங்கி நடத்தி வரும் பி ஜி நாயுடு இனிப்பு கடையில் கெட்டுப்போன இனிப்புகள் விற்பனை ஆவதாக புகார்கள் வந்துள்ளது.
திருச்சி சாலை ரோட்டில் உள்ள பாரதி ஹோட்டல் எதிரில் அமைந்துள்ள பிஜி நாயுடு கிளையில் சுகியில் ஆர்டர் செய்து வந்த பாதுஷாவில் நூல் நூலாக வந்ததை கண்டு மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது பலகாரத்தை நேரில் எடுத்து வாருங்கள் எனக் கூறியுள்ளார்.
நேரில் சென்று காட்டிய போது ஆம் கெட்டு போய் உள்ளது என ஒத்துக் கொண்டார் மேலாளர்.
மேலும் அதற்கு பதிலாக வேற இனிப்புகள் வாங்கிக் கொள்ளுங்கள் என அந்த வாடிக்கையாளரிடம் கூறியுள்ளார்.
திருச்சியில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் பிஜி நாயுடு ஸ்வீட் கடையில் தினந்தோறும் விற்பனை ஆகாத கிளைகளில் இருந்து நன்றாக விற்பனையாகும் கடைக்கு பழைய இனிப்புகளை மாற்றி விற்பனை செய்து விடுவார்கள்.
இதனால் இது போன்ற கெட்டுப் போன இனிப்புகள் விற்பனையாகின்றது .
தீபாவளி நெருங்கும் இந்த நேரத்தில் பொதுமக்கள் பிரபலமான கடைகளை தேடிச் சென்று தான் இனிப்புகள் வாங்குவார்கள்.
இது போன்ற கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்யும் பிரபல இனிப்பு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்யது வெறும் ரூ.3000 மட்டும் அபராதம் விதித்துள்ளனர்.
இரண்டு பாக்கெட் பான்பராக், ஹேன்ஸ் விற்கும் பெட்டி கடைகளுக்கு சீல் வைக்கும் அதிகாரி இது போன்ற பெரிய கடைகளுக்கு சீல் வைக்காதது ஏன்.?