திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர். அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து
மரியாதை.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று காலை நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கும், மரக்கடையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன்,பூபதி, சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், நிர்வாகிகள் இன்ஜினியர் இப்ராம்ஷா, வாழைக்காய் மண்டி சுரேஷ், பொன்னர்,பாலக்கரை ரவீந்திரன் , வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், இன்ஜினியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ரோஜர், குருமூர்த்தி,ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன்,
மலைக்கோட்டை ஜெகதீசன், வெல்லமண்டி கன்னியப்பன், கிருஷாந்த், டிபன்கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ, கிராப்பட்டி கமலஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.