திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் வரவேற்றுப் பேசினார்.
முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாநில அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும்,கட்சி வளர்ச்சி பணிகள்,வரும் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் முத்துக் குமார், பொதுக்குழு வெல்லமண்டி பெருமாள், தொழிற்சங்கம் ராஜேந்திரன், பகுதிச் செயலாளர்கள் எம். ஆர்.ஆர். முஸ்தபா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி, கலைவாணன், சுரேஷ்குப்தா,பூபதி,
என்ஜினீயர் இப்ராம்ஷா, கவுன்சிலர் அம்பிகாபதி,
என்ஜிஜீனியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், வக்கீல் மணிவண்ணன், பொன்னர், வெங்கட்பிரபு, வட்டச் செயலாளர் கல்லுக்குழி முருகன், ஷாஜஹான், ஹாரூன், ஜெ.பி.ஆர்.சதீஸ் குமார், தென்னூர் ராஜா, பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், சக்திவேல், சுரேந்தர், உய்ய கொண்டான் ரவிச்சந்திரன், ஐ.டி.விங் நிர்வாகிகள் கதிரவன், சுரேஷ், தில்லை விஸ்வா, உறையூர் சுரேஷ், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.