Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா.

0

 

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில்
14.09.23 முதல்
17.09.23 வரை நடைப்பெற்றது .

இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை பெற்றது.

இதில் பரிசு பெற்றவருக்கு திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி தளவாய் (TSP 1BN) அலுவலத்தில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு விழா நடந்தது.

திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில் , பொருளாளர் ரவிசங்கர், துனண செயலாளர் ரமேஷ், கனகராஜ், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

நாமக்கல் நடந்த தமிழ்நாடு மாவட்ட அளவிளான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 திருச்சி மாவட்ட அளவில் 6 தங்கம், 5 வெள்ளி , 4 வெண்கலம் பெற்று 6வது இடம் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கேடயம் பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி தளவாய் (Commandant of Police ) எம். ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
நினைவு பரிசு உடன் பாராட்டு சான்றிதழ் , வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவிற்கு திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் லாசர், நடராஜ், இளங்கோ, லட்சுமணன் , ஜீவா, தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி தளவாய் அதிகாரிகள் மற்றும் தடகள வீரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.