அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தாராநல்லூரில் பகுதி செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, முஸ்தபா. நாகநாதர் பாண்டி, கலைவாணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், என்ஜினியர் இப்ராகிம்ஷா, கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், நிர்வாகிகள் கலிலுல்ரகுமான், மரியம் ஆசிக்மீரா, முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,டிபன் கடை கார்த்திகேயன், எடத்தெரு எம்.கே.குமார், டாஸ்மாக் பிளாட்டோ, ஜெயலலிதா பேரவை பொன்னர்,பொன்.அகிலாண்டம் , பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், தாராநல்லூர் ரஜினி தனபால், கே.பி.ராமநாதன், தர்கா காஜா,கீழக்கரை முஸ்தபா, இன்ஜினியர் ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.