அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆலோசனைப்படி ஓபிஎஸ் அணி சார்பில் அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் மனோகரன், மாவட்ட இணைச் செயலாளர் ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மலைக்கோட்டை விஸ்வா, ஈஸ்வரன், மகளிர் அணி செயலாளர் கலா செல்வம், இணைச் செயலாளர் வசந்தி, துணைச் செயலாளர்கள் பத்மாவதி, கீதா, அமைப்பு சாரா கல்லுக்குழி ஆனந்த், கே.கே.எம்.முரளி, பகுதி செயலாளர்கள் சுமங்கலி சம்பத், சுதாகர், தாயார் சீனிவாசன், சந்திரன், வைத்திநாதன், எஸ்.பி.கார்த்தி கேயன், ராஜாமுகமது, எம்.ஜி.ஆர்.மன்றம், அருணாசலம், ஏர்போர்ட் பகுதி அவைத்தலைவர் பாஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.