அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா: திருச்சி 48 வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் கொட்டபட்டு இ.தர்மராஜ் தலைமையில் ராஜா தெரு. ரெங்கநகர் அருகே அண்ணாவின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ஜமால் முகம்மது, செல்வி, ஜெகதாம்பாள், தர்மராஜ், தம்பி, ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 என வண்ண கோலத்தால் வரையப்பட்டிருந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.