அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்ஜோதி மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் வளர்மதி, எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணை செயலாளர் பொன் செல்வராஜ், சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்
ஜெயக்குமார், முன்னாள் அரசு வக்கீல் வெங்கடேசன், ஸ்ரீரங்கம் ரவிசங்கர்,விஷன் பழனிச்சாமி, எட்டரை அன்பரசு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.