பதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி தில்லைநகர் அலுவலகம் முன்பு அவைத்தலைவர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் முஸ்தபா, அன்பழகன் ஏர்போர்ட் விஜி, கலைவாணன் மற்றும் வட்ட செயலாளர்கள் தில்லை முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், வசந்தம் செல்வமணி, சிங்காரம், செல்லப்பன் மற்றும் , பகுதி அவைத்தலைவர் என் குருமூர்த்தி, இன்ஜினியர்
எம்.பி.ரமேஷ், நாட் சொக்கலிங்கம், கேகே நகர் என்.பாலாஜி,
ரோஜர், இன்ஜினியர் இப்ராகிம்சா சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாஜகான், மாவட்ட இளைஞரணி பொருளாளர் சத்தீஷ் வெங்கட் பிரபு பாலக்கரை பகுதி அவைத்தலைவர் கே ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், கிருஷ்ணன், ஆனியன் கணேசன் உய்யக்கொண்டான் திருமலை ரவி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.