Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.

0

'- Advertisement -

 

Suresh

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை சாா்பில், ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலா் கு. சேசுராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா. சுரேஷ், அமைப்புச் செயலா் சசிகுமாா், துணைச் செயலா் காந்திநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய 8 பாடங்களுக்கு நியமிக்கப்பட்ட 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இதர ஆசிரியா்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று மே மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பாசிரியா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஆக. 28ஆம் தேதியும், செப்.4ஆம் தேதியும் இதேபோல, மாவட்டத் தலைநகரில் வாழ்வுரிமை காக்கும் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்.21ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.