மதுரை எழுச்சி மாநாட்டிற்காக திருச்சியில் இருந்து மதுரை வரை பாரதம் ஆளப்போகும் பரதனே என திருச்சி பேராசிரியர் பாபு ஒட்டிய போஸ்டரால் மாற்று கட்சியினர் வியப்பு.
மதுரையில் எடப்பாடி தலைமையில் அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்று சிறப்பித்தனர்.
இந்நிலையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் பாபு திருச்சியிலிருந்து மதுரை வரை சாலையின் இருபுறமும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளப்போவதாக சித்தரித்து ஆளப்போகும் பரதனே என்ற வாசகத்துடன் மாவட்ட செயலாளர் ப.குமார் படத்துடன் ஒட்டிய போஸ்டரால் திமுக, பாஜக போன்ற மாற்று கட்சியினர் வியந்தனர்.
இதற்கு முன் மற்ற மாவட்டங்களில் மாநாடு நடந்தால் அந்த மாவட்டங்களில் மட்டும் மற்ற ஊர் பிரமுகர்கள் போஸ்டர்கள் ஓட்டுவார்கள்.
ஆனால் பாபு போல் திருச்சியில் இருந்து மதுரை வரை எந்த கட்சியினரும் இதுவரை போஸ்டர் ஒட்டியதில்லை.
பாரதம் ஆளப்போகும் பரதனே என்ற வாசகம் பிடிக்காமல் மாற்றுக் கட்சியினர் பலவிதத்தில் போஸ்டர்களை கிழித்தும்,
சாணி அடித்தும் தங்களது வெறுப்பை காட்டியுள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் பேராசிரியர் பாபுவின் இந்த செயலை அதிமுகவினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.