Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட 3 நாள் திறப்பு விண்ணப்ப பதிவு முகாம் இன்று தொடங்கியது.

0

திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெற சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளது பின்வருமாறு: வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர், அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு விண்ணப்பதிவு முகாம்கள் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதற் கட்டமாகவும் மற்றும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்திட கால அட்டவணை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அறிவிப்பின்படி வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் ஏற்கனவே நடைபெற்ற முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஏதுவாக இன்று 18.08.2023, நாளை 19.08.2023 மற்றும் 20.08.2023 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குறிப்பாக முதல் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெற்ற இடங்கள் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெற்ற இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாமானது காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும். 18.08.2023,19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுவரை விண்ணப்பங்கள் ஏதும் பெறாத விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு வருகை தந்து அந்தந்த முகாம் பொறுப்பு அலுவலரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து முகாமில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு வருகை தரும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண இரசீது வங்கி பாஸ்புக் ஆகியனவற்றின் அசல் ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.

இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077 மற்றும் கைபேசி எண் 9384056213 இது மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.