திருச்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலரும்,
மாநகர் மாவட்ட செயலாளருமான செந்தில் நாதனின் பெறும் முயற்சி காரணமாக 13 ஆண்டுகளுக்குப் பின் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தார் ரோடு.பொதுமக்கள் பாராட்டு.
குடிநீர் இணைப்புக்காக 12 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டப்பட்ட குழிகள், அதன் பிறகு பாதாள சாக்கடை திட்டம்.. இப்படி பல காரணங்களால் சரியான சாலை வசதி இல்லாமல், குறிப்பாக கடந்த 3 ஆண்டுகள் மழை காலங்களில் இப்பகுதி பொதுமக்கள் பட்ட அவஸ்தையை சொல்லி மாளாது.(மோசமான சாலையை நினைத்து மழையே வேண்டாம் என யாகம் வளர்க்கலாம்) என எண்ணியிருந்த நிலையில் தற்போது இந்த வருட மழையை வரவேற்க ஆவலுடன் உள்ளனர்.
இப்பிரச்சனையை முன்னெடுத்து 47வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி கடந்த மாதம் குடியிருப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் உடன் மாநகராட்சி அரியமங்கலம் மண்டல உதவி செயற்பொறியாளர் லோகநாதன்,கேகே நகர் காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடும் போராட்டத்திற்கு பின் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியில் தார் ரோடு போடப்பட்டுள்ளது.
இப்போது தார் சாலை அமைய காரணமாக இருந்த 47 வது மாமன்ற உறுப்பினர் செந்தில் நாதனுக்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிறப்பாக பணிபுரிய நாமும் வாழ்த்துவோம்.