திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார்.
இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த வாலிபர் இறந்தது குறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.