லால்குடி அருகே
கதவைத் திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை பிரியா ஹோம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஜீஸ் (வயது 32).
இவர் வழக்கம் போல் இரவு சாப்பிட்டு விட்டு குடும்ப உறுப்பினர்களுடன் தூங்கிவிட்டார். அப்போது முன்பக்க கதவை சரியாக பூட்டாமல் விட்டு விட்டார்.
இந்த நிலையில் மர்ம சாமிகள் அவரது வீட்டுக்குள் புகுந்து மேஜையில் வைத்திருந்த ஒன்றரை பவுன் எடையுள்ள 4 தங்க மோதிரங்கள், 50 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ. 2500 ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து முகமது அஜீஸ் லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.